சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்டர் வழக்கில் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு - மும்பை உயர்நீதிமன்றம் ஃபிப்ரவரி 13-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Jan 23 2018 1:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்டர் வழக்கில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை மும்பை உயர்நீதிமன்றம் ஃபிப்ரவரி 13-ம் தேதிக்‍கு ஒத்திவைத்தது.

குஜராத்தில் கடந்த 2005-ம் ஆண்டு, சொராபுதீன் ஷேக், அவரது மனைவி ஆகியோர் போலி என்கவுன்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, சில ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உள்பட 23 பேர் மீது வழக்‍குத் தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்‍கை விசாரித்து வந்த மும்பை சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி பி.எச்.லோயா, கடந்த 2014-ம் ஆண்டு மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவர் உயிரிழந்த சில தினங்களில், சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்டர் வழக்கிலிருந்து அமித்ஷா விடுவிக்‍கப்பட்டார்.

இந்நிலையில், மும்பை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அமித்ஷா விடுவிக்‍கப்பட்டதை எதிர்த்து, மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்‍கு தொடரப்பட்டுள்ளது. அமித்ஷாவை விடுவித்து கீழமை நீதிமன்றம் பிறபித்த உத்தரவுக்கு எதிராக சி.பி.ஐ. போலீசார் ஏன் மேல்முறையீடு செய்யவில்லை? அமித்ஷா விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சி.பி.ஐ. மேல்முறையீடு செய்ய உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், வழக்கின் விசாரணையை மும்பை உயர்நீதிமன்றம் ஃபிப்ரவரி 13-ம் தேதிக்‍கு ஒத்திவைத்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00