புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஓம்பிரகாஷ் ராவத் நியமனம்
Jan 22 2018 3:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக திரு. ஓம்பிரகாஷ் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள திரு. அச்சல் குமார் ஜோதி, இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து, தற்போது தேர்தல் ஆணையராக இருக்கும் திரு. ஓம் பிரகாஷ் ராவத், புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த திரு. ஓம்பிரகாஷ் ராவத் தன்னுடைய நீண்ட அரசு பணிக் காலத்தில், மத்திய மற்றும் மாநில அரசில் முக்கியமான துறையில் பணியாற்றிவர். 1993-ம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சக செயலாளாராகவும் இவர் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநியமனத்தை அடுத்து ஏற்படவிருக்கும் தேர்தல் ஆணையருக்கான காலிப் பணியிடத்தில் மத்திய நிதித்துறையின் முன்னாள் செயலாளர் திரு. Ashok Lawasa நியமிக்கப்பட்டுள்ளார்.