ஹிமாச்சலப்பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு : இதமான சூழ்நிலையை அனுபவிக்க குவியும் சுற்றுலாப்பயணிகள்
Nov 19 2017 4:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹிமாச்சலப் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த இதமான சூழ்நிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலாப்பயணிகள் அங்கு குவிந்து வருகின்றனர்.
இந்த காட்சிகள் திரைப்படத்தில் வருபவை அல்ல. ஹிமாச்சலப்பிரதேசத்தில் தற்போது நிலவும் பனிப்பொழிவின் காட்சிகள். ஹிமாச்சலப் பிரதேசத்தில் கடும் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், அதிக அளவில் பனிப்பொழிவு காணப்படுகிறது. அங்குள்ள மணாலி, சிம்லா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெண் சாரல் போன்று பனிமழை பொழிகிறது. எங்கு நோக்கினும் பனிப்போர்வை போர்த்தியது போன்று வெண்மை நிறத்தில் காட்சியளிக்கிறது. இதனால் சாலைகள், வீடுகள் என பல இடங்களிலும் பனிக்குவியல்கள் குவிந்து கிடக்கின்றன. இந்த குளிர்ச்சியான சூழலை அனுபவிக்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் கண்ணுக்கெட்டும் துரம் வரை குவிந்து கிடக்கும் பனிக்குவியல்களை ஒருவருக்கொருவர் அள்ளி வீசி விளையாடி மகிழ்ந்தனர். மேலும் பலர் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இதேபோன்று அங்குள்ள பல பகுதிகளில் கடும் குளிர் நிலவுகிறது. சாலைகள் தோறும் பனிக்குவியல்கள் குவிந்து கிடப்பதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.