காஷ்மீரில் பந்திப்போரா மாவட்டத்தில், பாதுகாப்பு படையினருடன் மோதல் : பாகிஸ்தான் தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக் கொலை - இந்திய விமானப்படை வீரர் ஒருவர் வீரமரணம்
Nov 19 2017 12:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா மாவட்டத்தில், பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் 6 பேர்சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில், இந்திய விமானப்படை வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பந்திப்போரா மாவட்டத்திற்குட்பட்ட சன்டர்கீர் என்ற கிராமத்தில், தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு கிடைத்த தகவலையடுத்து, அங்கு, பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.
தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை நெருங்கியதும், சரணடையுமாறு அவர்களை எச்சரித்தனர். ஆனால், அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த கடும் துப்பாக்கிச் சண்டையில், 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்திய விமானப் படை அதிகாரி ஒருவர் வீரமணமடைந்தார். ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.