மெர்சல் திரைப்படம் கர்நாடகாவில் திரையிட கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு : தமிழ் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்
Oct 19 2017 4:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தை, கர்நாடகாவில் திரையிட கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பெங்களூரு, மைசூர் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கர்நாடகாவில், தமிழ் திரைப்படங்களை வெளியிடவிடாமல், அங்குள்ள கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பது வாடிக்கையாகிவுள்ளது. இந்நிலையில், விஜய் நடிப்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று வெளியான மெர்சல் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வாட்டாள் நாகராஜ் தலைமையிலான, கன்னட ரக்ஷன வேதிகா அமைப்பினர், மெர்சல் திரைப்படம் வெளியாகவிருந்த திரையரங்குகளை முற்றுகையிட்டதுடன், விளம்பர பதாகைகளை கிழித்தெறிந்தனர். மேலும், விளம்பர பேனர்களில் விஜய்க்கு அணிவிக்கப்பட்டிருந்த மாலைகளை அகற்றி ரகளையில் ஈடுபட்டனர். இதனை பார்த்துக் கொண்டிருந்த கன்னட போலீசாரும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இதனால் மெர்சல் திரைப்படத்தைக் காண முடியாமல் தமிழ் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.