ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வீரர்கள், பொதுமக்களுடன் இணைந்து ஆட்டம் பாட்டத்துடன் தீபாவளி உற்சாகமாகக் கொண்டாட்டம்
Oct 19 2017 3:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வீரர்கள் பொதுமக்களுடன் இணைந்து ஆட்டம் பாட்டத்துடன் தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடினார்கள்.
நாட்டின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று கொண்டாடப்பட்டது. வடமாநிலங்களில் இப்பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலுள்ள பூஞ்ச் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் தீபங்களை ஏற்றியும், பட்டாசுகளை வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். எல்லையோர கிராமமக்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகத்தை பகிர்ந்து கொண்டனர். மேலும் அவர்களுடன் இணைந்து ஆனந்தக் கூத்தாடி தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.