சீன ராணுவத்தினரின் ஊடுருவல் முயற்சியை அடுத்து எல்லையில் பதற்றம் - பாதுகாப்பு நிலையை நேரில் ஆய்வு செய்ய லடாக் விரைகிறார் ராணுவ தளபதி
Aug 20 2017 12:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எல்லையில் சீன ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதையடுத்து எழுந்துள்ள பதற்ற நிலை குறித்து, நேரில் ஆய்வு செய்ய ராணுவ தலைமைத் தளபதி திரு.பிபின்ராவத் இன்று லடாக் பகுதிக்கு விரைகிறார்.
டோக்லாம் பகுதியில் சீனப்படைகள் அத்துமீறி மேற்கொண்ட சாலைப் பணிகளை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே சுதந்திர தினத்தன்று லடாக் எல்லைப் பகுதியில் சீனா அத்துமீற முயற்சி செய்ததை இந்திய ராணுவம் முறியடித்தது. அப்போது இரு தரப்புக்கும் இடையே கல்வீச்சு நடைபெற்றதால் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக ராணுவ தலைமைத் தளபதி திரு.பிபின் ராவத் இன்று லடாக் செல்கிறார். அங்குள்ள உயர் ராணுவ அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.