தீவிரவாத பிரச்னைகளுக்‍கு 5 ஆண்டுகளில் முடிவுகட்டப்படும் - மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி - காஷ்மீர் பிரச்னையும் தீர்க்‍கப்படும் என நம்பிக்‍கை

Aug 20 2017 11:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

தீவிரவாத பிரச்னைக்‍கு இன்னும் 5 ஆண்டுகளில் முடிவுகட்டப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத்சிங் உறுதிபட தெரிவித்துள்ளார். காஷ்மீர் உள்ளிட்ட முக்‍கிய விவகாரங்களும் தீர்க்‍கப்படும் என்றும் அவர் நம்பிக்‍கை தெரிவித்துள்ளார்.

லக்‍னோவில் புதிய இந்தியா என்ற நிகழ்ச்சியில் பேசிய திரு.ராஜ்நாத்சிங், தீவிரவாதம், நக்‍சல் உள்ளிட்ட பிரச்னைகளை நாடு எதிர்கொண்டுள்ளதாகவும், காஷ்மீர், வடகிழக்‍கு மாநிலங்களின் பிரச்னைகளும் உள்ளதாகவும் தெவித்தார். இப்பிரச்னைகள் 2022ம் ஆண்டுக்‍குள் முற்றிலும் தீர்க்‍கப்படும் என தெரிவித்த மத்திய அமைச்சர் திரு.ராஜ்நாத்சிங், 2022ம் ஆண்டில் புதிய இந்தியா என்ற புதிய திட்டம் வகுக்‍கப்பட்டுள்ளதாகவும் கூறினார். காஷ்மீர் பகுதியில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனைகளை நடத்தி, தீவிரவாத செயல்களுக்‍கு அளிக்‍கப்படும் நிதியுதவியை முடக்‍கும் நடவடிக்‍கையில் ஈடுபட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்‍கைகள் மத்திய அரசால் தீவிரமாக எடுக்‍கப்பட்டு வரும் நிலையில், தீவிரவாத பிரச்னைக்‍கு முடிவுகட்டப்படும் என மத்திய அமைச்சர் திரு.ராஜ்நாத்சிங் கூறியிருப்பது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00