காரைக்காலில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நடனக் கலைஞர்கள் நிகழ்த்திய கலைநிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது
Aug 19 2017 9:01AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில், கலை பண்பாட்டுத்துறை மற்றும் தஞ்சை தென்னக பண்பாட்டுத்துறையும் இணைந்து கலைவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், வெளி மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. கேரள மாநிலத்தின் சிங்காரி மேள நடனம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரூப் நடனம், சத்தீர்கர் மாநிலத்தின் பந்தி நிரத்தியா நடனம், ஆந்திர மாநிலத்தின் லம்பாடி நடனம் உள்ளிட்டவை இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றன. மாநிலங்களுக்கிடையே நல்லுறவை வளர்க்கும் வகையிலும், பிற மாநிலங்களின் கலாச்சாரப் பெருமைகளை அறிந்துகொள்ளும் வகையிலும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, பார்வையாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.