ரம்ஜான் தினத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் - உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து, டெல்லி உட்பட நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

Jun 24 2017 11:14AM
எழுத்தின் அளவு: அ + அ -

ரம்ஜான் தினத்தில் லண்டன் நகர தாக்குதலைப் போன்று, டெல்லியிலும் தாக்குதல் நடத்த சில பயங்கரவாத குழுக்கள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில், பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த மே மாதம் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட இசைநிகழ்ச்சியின் போது பயங்கரவாதிகள் நடத்திய மனிதவெடிகுண்டு தாக்குதலில், குழந்தைகள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர். அதனைத்தொடர்ந்து கடந்த 3-ம் தேதி, லண்டன் பாலத்திலும் கண்மூடித்தனமாக வாகனத்தை ஓட்டி தாக்குதல் நடத்தப்பட்டதில், பலர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், வரும் 26-ம் தேதி நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதையொட்டி, அதனை சீர்குலைக்கும் வகையில், பயங்கரவாத குழுக்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக டெல்லி போலீசாருக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்து, Connaught பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், முக்கிய கட்டடங்களில் 24 மணி நேர கண்காணிப்புப் பணியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுமட்டுமின்றி, உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து, நாட்டின் பல்வேறு நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00