சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 40 தானியங்கி கைத் துப்பாக்கிகளை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல்
Apr 30 2017 5:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்தியபிரதேசதம், பீஹார் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தயாரிக்கப்படும் கள்ளத் துப்பாக்கிகள், தானியங்கி கைத் துப்பாக்கிள், தலைநகர் டெல்லியில் விற்பனை செய்யப்படுவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆயுதங்களை விற்பனை செய்யும் குழுவைப் பிடிக்க குற்றப்பிரிவு போலீசார் தனிக்குழு அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், டெல்லியில், மர்மநபர் ஒருவர் 40 தானியங்கி துப்பாக்கிகளை கைமாற்றியபோது பிடிபட்டார். அவரிடமிருந்து துப்பாக்கிகளை வாங்க வந்தவரும் கைது செய்யப்பட்டார். அவர்களிடமிருந்த 40 விலையுயர்ந்த நவீன தானியங்கி கைத்துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. டெல்லி குற்றப்பிரிவு போலீசார், இதுவரை சுமார் 400 கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பல்வேறு கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.