பஞ்சாப் மாநிலம் ஜனதாநகர் சைக்கிள் தொழிற்சாலையில் தீவிபத்து : தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் தீவிரம்
Apr 30 2017 5:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பஞ்சாப் மாநிலம் ஜனதாநகர் சைக்கிள் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டதையடுத்து, தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில், ஜனதா நகர் சைக்கிள் தொழிற்சாலையில் இன்று தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 6 தீயணைப்பு வாகனஙகளில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். தீ அருகில் உள்ள கட்டடங்களுக்கு பரவாமல் தடுக்க, எரியும் பொருட்களை அப்புறப்படுத்தினர். அருகில் உள்ள கட்டங்களில் உள்ளவர்கள் அனைவரும் அப்புறப்படுத்தப் பட்டனர். தீ தொடர்ந்து கொளுந்து விட்டு எரிந்து வருவதால் தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகின்றனர். தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.