உத்தரப்பிரதேசத்தில் ஒரே நேரத்தில் 101 ஜோடிகளுக்கு திருமணம் : கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட அவர்கள் அப்போது உறுதி பூண்டனர்
Apr 30 2017 11:04AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரப்பிரதேசத்தில் ஒரே நேரத்தில் 101 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட அவர்கள் அப்போது உறுதி பூண்டனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் Amroha பகுதியில், மாபெரும் திருமண விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், 101 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. சீர்வரிசைப் பொருட்களுடன், பாரம்பரிய முறைப்படி குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. திருமண வைபவம் தங்களுக்கு பெரிதும் மகிழ்ச்சியளிப்பதாக மணமக்கள் தெரிவித்தனர். கங்கை நதியை தூய்மைப் படுத்தும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும், அப்போது மணமக்கள் உறுதி பூண்டனர்.