லண்டனில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானத்தில் திடீரென ஆக்சிஜன் முகமூடிகள் வெளிவந்ததால் பயணிகள் பீதி - விமானம் லண்டனுக்கு திரும்பி அனுப்பிவைக்கப்பட்டது
Apr 30 2017 10:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
லண்டனில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானத்தில் திடீரென ஆக்சிஜன் முகமூடிகள் வெளிவந்ததால் பயணிகள் பீதியடைந்தனர். இதையடுத்து விமானம் லண்டனுக்கு திரும்பி அனுப்பிவைக்கப்பட்டது.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து டெல்லிக்கு நேற்றிரவு பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது திடீரென அவசர கால ஆக்சிஜன் முகமூடிகள் வெளிவந்தது. இதனால் பயணிகள் கடும் பீதியடைந்தனர். இதனையடுத்து, அந்த விமானம் லண்டனுக்கு திரும்பியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விமான நிறுவனம், விமானத்தில், திடீரென ஏர் பிரஷர் காரணமாக ஆக்சிஜன் முகமூடிகள் வெளிவந்ததாக தெரிவித்தது.