போருக்கு தயாராக இருக்குமாறு வீரர்களுக்கு இந்திய விமானப்படை தளபதி உத்தரவு - போர் தளவாடங்களை தயார்படுத்துமாறு அறிவித்திருப்பதால் திடீர் பரபரப்பு

Apr 30 2017 10:27AM
எழுத்தின் அளவு: அ + அ -

போருக்கு எந்த நேரத்திலும் தயாராக இருக்குமாறு இந்திய வீரர்களுக்கு விமானப்படை தளபதி திடீர் உத்தரவு பிறப்பித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் தொடர்ந்து பிரச்னை நீடித்து வருகிறது. காஷ்மீர் மாநில எல்லை விவகாரத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்தை தூண்டிவிடுவதோடு, போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளுக்கு எதிராக தாக்குதல்களையும் அரங்கேற்றி வருகிறது. காஷ்மீரில் நிலவும் அனைத்து பிரச்னைகளுக்கும் பாகிஸ்தானே பின்புலமாக செயல்படுகிறது என அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளும் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், அருணாச்சலப்பிரதேச விவகாரத்தில் சீனா இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்தியா விமானப்படை தளபதி தனோவா, வீரர்களை போருக்கு தயாராகுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். குறுகிய காலத்தில் போரை எதிர்கொள்ளும் வகையில், அதற்கேற்ப போர் தளவாடங்களை தயார்படுத்தி விழிப்புடன் இருக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். விமானப்படை தளபதியின் இந்த திடீர் உத்தரவு டெல்லி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00