கேரள மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு ஐ.எஸ். தீவிரவாதி அஃப்கனிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டதாக கேரள காவல்துறை தகவல்
Apr 30 2017 10:25AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரள மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு ஐ.எஸ். தீவிரவாதி அஃப்கனிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டதாக கேரள காவல்துறை தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலாக இருந்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்தியாவிலும் முகாம் அமைத்து சதித்திட்டங்களை தீட்டி வருகின்றனர். மும்பை, ஹைதராபாத் மற்றும் கேரளா போன்ற இடங்களில் இருந்து இளைஞர்கள் சிலர் இந்த அமைப்பில் சேர்ந்து வருவதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாயின. கேரளாவில் இருந்து அஃப்கனிஸ்தான் சென்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் இருவர் ஏற்கெனவே அங்கு சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தற்போது Bastian என்ற மற்றொரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக கேரள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 20 வயது இளைஞரான அந்நபர் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திலிருந்து அஃப்கனிஸ்தான் சென்றவர் என்றும் கேரள காவல்துறையின் நுண்ணறிவு பிரிவு தெரிவித்துள்ளது. கேரளாவில் இருந்து அஃப்கனிஸ்தான் சென்ற 21 ஐ.எஸ். தீவிரவாதிகளில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.