விமானங்களில் அனுமதி மறுக்கப்பட்ட சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட், ரயில் மூலம் மும்பை சென்றபோது நடுவழியில் மாயமாகிவிட்டதாகக் கூறப்படுவதால் பரபரப்பு
Mar 26 2017 6:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விமானங்களில் அனுமதி மறுக்கப்பட்ட சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட், ரயில் மூலம் மும்பை சென்றபோது, நடுவழியில் மாயமாகிவிட்டதாகக் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏர் இந்தியா விமான ஊழியரை தாக்கியதாக எழுந்த புகாரையடுத்து, சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் விமானங்களில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், டெல்லியில் இருந்து மும்பைக்கு ரயில் மூலம் புறப்பட்ட கெய்க்வாட், திட்டமிட்டபடி மும்பை சென்று சேரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. நடுவழியில், குஜராத் மாநிலம் வாபி ரயில் நிலையத்தில் அவர் இறங்கியதாக சிவசேனா கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே, நடந்த சம்பவத்திற்கு விளக்கம் அளிக்குமாறு கெய்க்வாட்டுக்கு, திரு. உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் மிக மோசமானது என சிவசேனா கட்சி கருதுவதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறக்கூடாது என்பதில், கட்சி உறுதியாக இருப்பதாகவும் சிவசேனா செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.