திரிபுராவில் பாகிஸ்தான் ராணுவத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி
Mar 26 2017 5:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திரிபுரா மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கடந்த 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம், இந்தியா மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனை நினைவு கூறும் வகையில், திரிபுரா மாநிலத்தில் உள்ள Agartala பகுதியில் பல்வேறுநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், தங்களது மூதாதையர்களை இழந்தவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மேலும் தங்களது இரங்கலை தெரிவிக்கும் வண்ணம் பல்வேறு நடனக்கலைஞர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி நடனமாடினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.