மத்தியப்பிரதேசத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : 6 வீரர்கள் படுகாயம்

Mar 26 2017 5:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்தியப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ராணுவ தளவாட தொழிற் சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆறு வீரர்கள் படுகாயமடைந்தனர்.

மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் ராணுவ தளவாட தொழில்சாலை அமைந்துள்ளது. இங்கு நேற்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆறு ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். மேலும் அங்கிருந்த ராணுவ தளவாடங்கள், வெடிபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு விலை உயர்ந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. இதில் வெடிபொருட்கள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியதால் பெரும் விபத்தாக மாறியது. இதையடுத்து 50 க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ராணுவ தளவாடத் தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00