தீவிரவாதிகளின் ஊடுருவலைதடுக்க இந்தியா நடவடிக்கை - பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உடனான சர்வதேச எல்லைகளுக்கு சீல் வைக்க விரைவில் ஏற்பாடு : மத்திய உள்துறை அமைச்சர் தகவல்
Mar 26 2017 5:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவுக்குள் தீவிரவாதிகளின் ஊடுருவலைதடுப்பதற்காக பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உடனான சர்வதேச எல்லைகளுக்கு சீல் வைக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் Tekanpur என்ற இடத்தில் உள்ள எல்லைப்பாதுகாப்பு படை அகாடமியில் நடைபெற்ற அதிகாரிகளின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்தியாவுக்கு வரும் அகதிகளின் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், இந்தியாவுக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளை தடுக்கவும் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உடனான சர்வதேச எல்லைகளுக்கு சீலிட மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகவும், முதற்கட்டமாக அடுத்த ஆண்டுவாக்கில் பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லைக்கு சீல் வைக்கப்படும் என்றும் திரு. ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இந்தத் திட்டத்தை மத்திய அரசு அளவில் உள்துறைச் செயலாளரும், மாநில அரசளவில் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் அவ்வப்போது கண்காணிப்பார்கள் என்றும் கடினமான பகுதிகளில் எல்லைக்கு சீலிட தேவையான தொழில்நுட்ப உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்றும் திரு. ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.