ஜம்மு காஷ்மீர், பாரமுல்லாவில் ரோந்து போலீசாரை தாக்கி துப்பாக்கிகளைப் பறித்துச் சென்ற தீவிரவாதி பிடிபட்டார் : மற்றொரு தீவிரவாதி துப்பாக்கிகளுடன் தப்பினார் - உஷார் நிலை பிறப்பிப்பு
Mar 26 2017 12:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் ரோந்து போலீசாரை தாக்கி, அவர்களிடமிருந்த துப்பாக்கிகளைப் பறித்துச் சென்ற தீவிரவாதி ஒருவர் பிடிபட்டார். மற்றொரு தீவிரவாதி துப்பாக்கிகளுடன் தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து அப்பகுதியில் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாரமுல்லா மாவட்டத்தில் இன்று அதிகாலை தாவி என்ற இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை 2 தீவிரவாதிகள் திடீரென தாக்கினர். போலீசாரிடமிருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகளைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடிய தீவிரவாதிகளில் ஒருவர் பிடிபட்டார். மற்றொரு தீவிரவாதி துப்பாக்கிகளுடன் தப்பி ஓடிவிட்டார். அவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தையடுத்து அப்பகுதி முழுவதும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் தாக்குதலால் காயமடைந்த காவலர் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிடிபட்ட தீவிரவாதியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.