மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி தொடர்ந்த அவதூறு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சித்தலைவர்கள் 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் : அருண்ஜேட்லி ஆஜராகாததால், கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர்கள் கடும் ரகளை

Mar 26 2017 12:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி தொடர்ந்த அவதூறு வழக்கில் டெல்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சித்தலைவர்கள் 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அருண்ஜேட்லி ஆஜராகாததால், திரு. கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர்கள் கடும் ரகளையில் ஈடுபட்டனர்.

மத்திய அமைச்சர் திரு. அருண் ஜேட்லி, டெல்லி கிரிக்கெட் சங்கத்தலைவராக இருந்தபோது நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக, கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சித்தலைவர்கள் அசுதோஷ் உட்பட 5 பேர் மீது, திரு. அருண் ஜெட்லி அவதூறு வழக்கு தொடர்ந்தார். டெல்லி தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சித்தலைவர்கள் 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். விசாரணையின்போது அருண் ஜேட்லி ஆஜராகாததால், கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

இருதரப்பு வழக்கறிஞர்களிடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதனால் நீதிமன்ற அறையில் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து, வழக்கு விசாரணையை மே மாதம் 20-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00