காஷ்மீர் மாநிலத்தில் கனமழை மற்றும் மண்சரிவு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலை சீர்படுத்தியதால் வாகனப் போக்குவரத்திற்கு அனுமதி

Feb 25 2017 1:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஷ்மீர் மாநிலத்தில், கனமழை மற்றும் மண்சரிவு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலை, சீர்படுத்தியதை அடுத்து, ஒருவழி வாகனப் போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளோடு இணைக்கும் முக்கியச் சாலையாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரம்பான் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழையால், தொடர் நிலச்சரிவு ஏற்பட்டது. சாலைகளில் மண் மற்றும் கற்கள் நிறைந்து காணப்பட்டது. இதனால், சுமார் 300 கிலோமீட்டர் தொலைவுடைய ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதனால், ஏராளமான வாகனங்கள் சாலைகளில் நிறுத்தப்பட்டது. பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. சாலைகளில் பரவிக்கிடக்கும் மண் மற்றும் கற்களை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், நிலைமை ஓரளவு சீரானதை அடுத்து, ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒருவழி போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. எதிர் திசையில் வரும் வாகனங்களுக்கு அனுமதிவழங்கப்படவில்லை. இதனால், வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.

விரைவில், சாலை முழுமையாக சீர்படுத்தப்படும் என்றும், அதன் பின்னர் வழக்கம்போல் இருவழிப்போக்குவரத்து இயக்க அனுமதிக்கப்படும் என அம்மாநில மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00