மேற்குவங்கத்தில் சிறுத்தைப்புலி தோலை கடத்த முயன்ற 2 பேர் வனத்துறையினரால் கைது
Feb 25 2017 12:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அடர்ந்த வனப்பகுதிகளில் வசிக்கும் யானை, புலி, சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி அதன் தோல், பற்கள், நகங்களை கடத்தும் கும்பல்களை கட்டுப்படுத்த, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், மேற்குவங்க மாநிலம் Jalpaiguri பகுதியில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய இருவரிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் சிறுத்தைப்புலியை வேட்டையாடியது தெரியவந்தது. பின்னர் அவர்கள் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த சிறுத்தைப்புலி தோலை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.