அமெரிக்காவில் இந்தியப் பொறியாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அந்நாட்டு அரசு கடும் கண்டனம் - உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியா உறுதி
Feb 25 2017 11:38AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் இந்தியப் பொறியாளர் ஸ்ரீனிவாஸ் படுகொலை தொடர்பாக அந்நாட்டு புலனாய்வுத்துறை விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டினரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக, அவர்களது உறவினர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகள், அந்நாட்டு மக்களை மட்டுமின்றி, உலக நாடுகளையும் அதிருப்தியில் ஆழ்த்தி வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவுக்குள் நுழைய சிரியா அகதிகளுக்கு தடை, 7 முஸ்லிம் நாடுகளுக்கு விசா தடை, மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் திட்டம் உள்ளிட்ட அமெரிக்க குடியுரிமை மற்றும் வெளியுறவு கொள்கையில் டிரம்பின் முடிவுகள் அமெரிக்க மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கன்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்த இந்தியப் பொறியாளர் ஸ்ரீனிவாஸ், நேற்று முன்தினம் தனது நண்பருடன் இருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். இதுதொடர்பாக Adam Purinton என்பவரை போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நிறவெறி காரணமாக படுகொலை நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுவதால், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டினரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக அவர்களது உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்பதை மையமாகக் கொண்டு அதிபர் டிரம்ப் மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகள், இதனை உறுதிப்படுத்துவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.