உத்தரபிரதேசத்தில் 500 சீரற்ற எண்களை 8 நிமிடம் 33 வினாடிகளில் மனப்பாடம் செய்து ஒப்புவித்து 19 வயது பெண் கின்னஸ் சாதனை
Jan 20 2017 3:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரபிரதேசம் மாநிலம் மதுராவில் வசிக்கும் 19 வயது பெண் ஒருவர், 500 சீரற்ற எண்களை, 8 நிமிடம் 33 வினாடிகளில் மனப்பாடம் செய்து, ஒப்புவித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலம் மதுராவில் வசிக்கும் Prerna Sharma என்ற 19 வயதுடைய பெண் புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது, 500 சீரற்ற எண்களை, 8 நிமிடம் 33 வினாடிகளில் மனப்பாடம் செய்து, ஒப்புவித்து புதிய சாதனை படைத்துள்ளார். அவரது இந்த சாதனை "கின்னஸ்" உலக சாதனையாக கருதப்படுகிறது. மேலும், அவரது சாதனையை கின்னஸ் குழு அங்கீகரித்து உற்சாகப்படுத்தியுள்ளது. Prerna Sharma-ன் சாதனைக்கு நாடுமுழுவதும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.