தமிழகத்தில் ஓரிரு நாளில் ஜல்லிகட்டு - தமிழக அரசின் முயற்சிக்கு நல்ல முடிவு கிடைக்கும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உறுதி
Jan 20 2017 4:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக அரசின் அவசர சட்ட வரைவு இன்று கிடைத்ததாகவும், இப்பிரச்சனைக்கு நாளைக்குள் முடிவு காணப்படும் என்றும், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு. அனில் மாதவ் தவே தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்றும், தமிழக மக்களின் பொறுமை மிகவும் பாராட்டுதலுக்கு உரியது என்றும், தமிழக பாரம்பரியம் காக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். தமிழக அரசின் கோரிக்கையை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், தமிழக மக்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி கிடைக்கும் என்றும் மத்திய அமைச்சர் திரு. அனில் மாதவ் தவே தெரிவித்தார்.