குஜராத் மாநில தேசிய நெடுஞ்சாலையில் கார் - டெம்போ மோதி விபத்து - 6 பேர் பலி
Jan 20 2017 1:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குஜராத் மாநில தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை நிகழ்ந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர்.
குஜராத் மாநில சர்வதேச விமான நிலையத்திலிருந்து காரில் திரும்பிக் கொண்டிருந்த சிலர், Valsat பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த டெம்போ மீது அவர்கள் சென்ற கார் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை நேரத்தில் விபத்து நேரிட்டுள்ளதால், பனிமூட்டம் காரணமாக இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.