இந்திய ராணுவத்தின் தகவல் தொடர்புகளை சீனா சேதப்படுத்த வாய்ப்பு : விமானப்படை முன்னாள் தலைவர் எச்சரிக்கை
Jan 20 2017 12:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய ராணுவத்தின் தகவல் தொடர்புகளை சீனா சேதப்படுத்த வாய்ப்புள்ளதாக விமானப்படை முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளின் அத்துமீறல்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வரும் போதிலும், தொழில்நுட்ப அளவில் முன்னேற்றம் காணப்பட வேண்டியது மிகவும் அவசியம் என விமானப்படை முன்னாள் தலைவர் Fali Major தெரிவித்துள்ளார். இணையவழி குற்றங்கள் அதிகரித்துள்ள சூழ்நிலையில், ராணுவத்தில் நவீன தொழில்நுட்பத்தை புகுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள போர் விமானங்களின் தகவல்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் திருடப்பட வாய்ப்புள்ளதால், அதனை கண்காணிக்க வேண்டும் என்று கூறினார். பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் போதிய தொழில்நுட்ப வளர்ச்சியின்மையால் இந்திய ராணுவத்தின் தகவல் தொடர்புகளை சீனா சேதப்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அவர் மேலும் எச்சரித்தார்.