இந்திய ராணுவத்தின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு பழிவாங்கும் வகையில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பு, இந்தியாவில் ரயில் விபத்துகளை நிகழ்த்தியுள்ளது - உளவுத்துறை விசாரணையில் தகவல்
Jan 20 2017 3:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய ராணுவத்தின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு பழிவாங்கும் வகையில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பு, இந்தியாவில் ரயில் விபத்துகளை நிகழ்த்தியுள்ளதாக, உளவுத்துறை அதிகாரி நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 வீரர்கள் உயிரிழந்ததை அடுத்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன், முகாம்களும் அழிக்கப்பட்டன.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே நிகழ்ந்த இரண்டு ரயில் விபத்துகளில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பீகார் போலீசார் 3 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், ரயில் விபத்து சம்பவங்களின் பின்னணியில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பது இருப்பது தெரியவந்தது. ஏற்கனவே பல்வேறு குற்றச்செயல்களில் கைது செய்யப்பட்ட இம்மூவரும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பின் கட்டளைப்படியே உத்தரப்பிரதேசத்தில் ரயில் கவிழ்ப்பு சதித்திட்டத்தில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டனர்.
மேலும், அவர்களிடம், உளவுத்துறை அதிகாரி ஒருவர் நடத்திய விசாரணையில் இந்திய ராணுவத்தின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலுக்கு பழிவாங்கும் விதத்தில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ, ரயில் கவிழ்ப்பு சதித்திட்டத்தில் ஈடுபட்டது தற்போது அம்பலமாகியுள்ளது.