குச்சிப்புடி நடனத்தில் கின்னஸ் சாதனை - ஒரே நேரத்தில் நடனமாடிய 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள்
Dec 26 2016 9:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆந்திராவில் ஒரே இடத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு குச்சிப்புடி நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தின் பாரம்பரிய நடனங்களில் குச்சிப்புடி நடனம் மிகவும் புகழ்பெற்றதாகும். இந்த நடனம் தொடர்பாக 2 நாள் மாநாடு விஜயவாடாவில் நடைபெற்றது. இதில், இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, மொரிஷியஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமான குச்சிப்புடி கலைஞர்கள் கலந்துகொண்டனர். முடிவில், பிரம்மாண்டமான குச்சிப்புடி நடனம் அரங்கேற்றப்பட்டது. இதில், 6-வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 6,117 பெண் கலைஞர்கள் பங்கேற்றனர்.