கர்நாடகாவில் 500 கோடி ரூபாய் செலவில் மகளுக்கு பிரம்மாண்ட திருமணம் நடத்திய முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு
Dec 7 2016 7:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் ஓட்டுநராக இருந்த ரமேஷ் கவுடா, மதூர் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடல் அருகில் கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எழுதப்பட்டிருந்தது. 100 கோடி ரூபாய் கருப்பு பணம் மாற்றப்பட்டதை தெரிந்து கொண்டு அதிகாரிகள் தொடர்ந்து தொந்தரவு செய்ததால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, தனது மகளுக்கு 500 கோடி ரூபாயில் ஆடம்பர திருமணத்தை நடத்தி வைத்தார். இந்நிலையில் ஜனார்த்தன ரெட்டியிடம் உள்ள கருப்பு பணத்தை மாற்றி தருவதற்கு ஓட்டுநர் ரமேஷ் கவுடா, 20 சதவீதம் கமிஷன் பெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.