பீகார் மாநிலத்தில் 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய 500 ரூபாய் நோட்டுக்களை போலீசார் பறிமுதல்
Dec 7 2016 5:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பீகார் மாநிலத்தில் உள்ள கயா ரயில் நிலையத்திற்கு வந்த ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், சந்தேகத்திற்கிடமான வகையில் 3 பைகள் கண்டெடுக்கப்பட்டது. அந்த பைகளில் 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பழைய 500 ரூபாய் நோட்டுக்கள் மற்றும் 14 மதுபான பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மத்தியஅரசு அறிவித்த வருமான விவர அறிவிப்பு திட்டத்தின் கீழ் ஹைதராபாத்தில் உள்ள பி லக்ஷ்மன் ராவ் என்பவர் தம்மிடம் 9,800 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் சொத்துக்கள் இருப்பதாக வருமான வரி துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து வருமான வரி துறையினர் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.