கடல் போக்குவரத்து மற்றும் மீட்புப் பணிகளுக்கு இஸ்ரோ வடிவமைத்த RESOURCESAT-2A செயற்கைக்கோள் - பி.எஸ்.எல்.வி. சி-36 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
Dec 7 2016 9:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடல் போக்குவரத்து மற்றும் மீட்புப் பணிகள் உள்ளிட்ட பூமியின் மேல்பரப்பு தேடுதலுக்காக இஸ்ரோ வடிவமைத்துள்ள RESOURCESAT-2A செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி. சி-36 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளுக்காக தொடர்ந்து ஏராளமான செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக செலுத்தி வருகிறது. அதன்படி, RESOURCESAT-2A செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10.24 மணிக்கு PSLV-C36 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியப் பெருங்கடலில், கடல் போக்குவரத்து மற்றும் மீட்புப் பணிகள் உள்ளிட்ட பூமியின் மேல்பரப்பு தேடுதல் தொடர்பான ஆராய்ச்சிக்காக, அனுப்பப்பட்டுள்ள RESOURCESAT-2A, 5 ஆண்டுகள் வரை விண்ணில் இருந்து பூமிக்கு தகவல்களை அனுப்பும். இஸ்ரோ, 38-வது முறையாக PSLV-C36 ராக்கெட்டை பயன்படுத்தி, இந்த செயற்கைக்கோளை ஏவியிருப்பது குறிப்பிடத்தக்கது.