ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 7 வயது பள்ளிச் சிறுவன் ஆசிய அளவிலான ஜுனியர் கராத்தே போட்டியில் பட்டம் வென்று சாதனை
Nov 30 2016 12:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 7 வயது பள்ளிச் சிறுவன், ஆசிய அளவிலான ஜுனியர் கராத்தே போட்டியில் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளான்.
டெல்லியில் நடைபெற்ற ஆசிய ஜுனியர் கராத்தே போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். நேற்று நடைபெற்ற இப்போட்டியின் இறுதிச்சுற்றில், இந்திய வீரரான ஜம்மு-காஷ்மீர் மாநிலம் Bandipora பகுதியைச் சேர்ந்த Mansoor என்ற 7 வயது சிறுவன், இலங்கை வீரருடன் மோதினான். விறுவிறுப்பான இப்போட்டியில், Mansoor அபார வெற்றிபெற்று, சாம்பியன் பட்டம் வென்றான். முன்னதாக நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டிகளில், Mansoor, பூடான், மலேஷிய நாடுகளின் வீரர்களை தோற்கடித்திருந்தான். கடினமான உழைப்பின் பலனாகவே Mansoor-க்கு இந்த வெற்றி கிடைத்ததாக அவனது பயிற்சியாளர் Fasil Ali Dar தெரிவித்தார்.