இந்தியாவுக்கு எதிராக, பாகிஸ்தான் மறைமுகப்போரில் ஈடுபடுவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பகிரங்க குற்றச்சாட்டு : பயங்கரவாதத்தின் மூலமாக இந்தியாவுக்கு தீங்கிழைக்க பாகிஸ்தான் முயற்சிப்பதாகவும் கருத்து
Oct 28 2016 9:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தான் மறைமுகப்போரில் ஈடுபடுவதாக வெளிப்படையாக குற்றம்சாட்டிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கோழைத்தனமாக பயங்கரவாத்தின் துணை கொண்டு இந்தியாவுக்கு தீங்கிழைக்க பாகிஸ்தான் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.
இந்தோ-திபெத் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படைப்பிரிவின் 55-வது எழுச்சி தினம், Greater Noida-வில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அண்டை நாடு மறைமுகப்போரை முன்னெடுக்கிறது என்றும், ஆனால், பயங்கரவாதம் தைரியமானவர்களின் ஆயுதம் கிடையாது என்றும், அது கோழைகளின் ஆயுதம் என்றும் குறிப்பிட்டார். பாகிஸ்தான், பயங்கரவாதிகளின் துணையுடன் சண்டையில் ஈடுபடுவதாகவும், பயங்கரவாதத்தின் மூலமாக இந்தியாவுக்கு தீங்கிழைக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறதாகவும் திரு. ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறிய தாக்குதல் நடத்தி வருவதற்கு, இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர் என்றும் திரு. ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.