உரி ராணுவ முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்து, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த வீரர் ராஜ் கிஷோர் சிங்-கின் இறுதி சடங்கு, அவரின் சொந்த ஊரான பீகாரில் நடைபெற்றது
Oct 1 2016 11:47AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் உரி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது கடந்த 18-ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் 18 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வீரர்களில் ஒருவரான ராஜ் கிஷோர் சிங் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், உரி தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை 19ஆக உயர்ந்தது. இதனையடுத்து, ராஜ் கிஷோர் சிங்-கின் உடல், அவரது சொந்த ஊரான பீகார் மாநிலத்தில் உள்ள அரா பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டது. அவரது உடலுக்கு, குடும்பத்தினர், நண்பர்கள், ஊர்மக்கள் உள்ளிட்டோர் இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் ராணுவ மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற்றது.