ரயில் பயணிகள் காப்பீட்டுத் திட்டத்தில் சேர, அறிவிக்கப்பட்ட ஒரு மாதத்திலேயே சுமார் ஒரு கோடி பேர் விருப்பம் தெரிவித்துள்ளதாக ரயில்வே துறை தகவல்
Oct 1 2016 11:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2016-17 ரயில்வே பட்ஜெட்டில், ரயில் பயணிகளுக்கான காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி, விபத்து உள்ளிட்ட காரணங்களால் ரயில் பயணிகளுக்கு ஏற்படும் உயிரிழப்பு மற்றும் நிரந்தர உடல் உறுப்பு பாதிப்பு போன்றவற்றுக்காக அவர்களது குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. IRCTC வெப்சைட் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் பயணிகளுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும் என்றும், இதற்காக கட்டணத்துடன் 92 பைசா கூடுதலாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. புறநகர் ரயில்களுக்கு இந்த திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் ரயில் பயணிகளுக்கான காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்ட கடந்த மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து, இதுவரை ஒரு கோடி பேருக்குமேல் இத்திட்டத்தில் சேர விருப்பம் தெரிவித்துள்ளதாக IRCTC-யின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. AK Manocha தெரிவித்துள்ளார்.