தெலுங்கு மொழி பேசும் மகளிர் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் பாரம்பரிய Badhukkamma திருவிழா, தெலங்கானா மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது
Oct 1 2016 11:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆண்டுதோறும் மகாளய அமாவாசை தினத்தன்று, தெலுங்கு மொழி பேசும் பெண்களால் Badhukkamma எனப்படும் இத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். 9 நாட்களுக்கு நடைபெறும் இவ்விழாவில், மலர்களை 7 அடுக்குகளாக வைத்து, துர்கா தேவிக்கு பூஜை செய்து மகளிர் வழிபடுவர். கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் இந்த பாரம்பரியத் திருவிழா, மகாளய அமாவாசை தினமான நேற்று கோலாகலகமாகத் தொடங்கியுள்ளது. இந்த திருவிழாவின்போது, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில், ஏராளமான மகளிர், மலர்களை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக சென்றனர். பின்னர், தாங்கள் கொண்டுவந்த 7 அடுக்கு மலர்களை ஒன்றாக வைத்து பெண்கள் அனைவரும் பாரம்பரிய நடனமாடியும், கிராமியப் பாடல்களை பாடியும் மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து, மலர்களை நீர்நிலைகளில் விட்டு வழிபாடு மேற்கொண்டனர். இந்த பாரம்பரிய திருவிழாவில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.