காவேரி நதிநீர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் - காவேரி மேலாண்மை வாரியத்திற்கான பிரதிநிதிகளின் பெயர்களை தெரிவிக்க தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அரசுகளுக்கு மத்திய நீர்வள அமைச்சகம் உத்தரவு

Oct 1 2016 10:50AM
எழுத்தின் அளவு: அ + அ -

காவேரி நதி நீர் பிரச்சனை குறித்து விவாதிக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றுள்ளது. காவேரி மேலாண்மை வாரியத்தை, வரும் 4-ம் தேதிக்குள் மத்திய அரசு அமைக்கவும், காவேரியில் இருந்து தமிழகத்திற்கு இன்றுமுதல், வரும் 6-ம் தேதி வரை கர்நாடக அரசு, விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இக்கூட்டம் நடைபெற்றது.

டெல்லியில். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே மத்திய நீர்வளத்துறை அமைச்சர் செல்வி. உமா பாரதி முன்னிலையில், காவேரி பிரச்சினை தொடர்பாக நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, தமிழகத்தின் சார்பில், முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் அறிக்கை வாசிக்கப்பட்டது. இந்த அறிக்கையில், உச்சநீதிமன்ற உத்தரவுக்கிணங்க கர்நாடகா உடனடியாக தண்ணீர் திறந்துவிடுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற ஆணையின்படி உடனடியாக காவேரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

தமிழக-கர்நாடக மாநில அரசுகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை விவரங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் திரு. தீபக் மிஸ்ரா, திரு. U.U. லலித் ஆகியோர் முன்னிலையில் நேற்று தாக்கல் செய்தது. இதனையடுத்து, மத்திய அரசு, வரும் 4-ம் தேதிக்குள் காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும், கர்நாடக அரசு, இன்றுமுதல், 6-ம் தேதி வரை தமிழகத்துக்கு காவேரியில் விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், காவேரி நதிநீர் சம்பந்தப்பட்ட தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநில அரசுகள், காவேரி மேலாண்மை வாரியத்துக்கான தங்களது பிரதிநிதிகளின் பெயர்களை, இன்று மாலை 4 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என மத்திய நீர்வள அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாகவும், இதற்கான கடிதம், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நீர்வள அமைச்சக செயலாளர் திரு. சசி சேகர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த காவேரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நேற்று கூட்டம் நடைபெற்றதாகவும், இந்த கூட்டத்தில், சில மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00