ஜம்மு காஷ்மீர் மாநில எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளுக்கு எதிரான தீவிர தேடுதல் வேட்டை
Oct 1 2016 10:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு காஷ்மீர் மாநில எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள காடுகளில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா? என்று பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுவருவதாக அம்மாநிலப் போலீசார் தெரிவித்துள்ளனர். நேற்றுமுன்தினம் அப்பகுதியில் தீவிரவாதிகள் சிலருடன் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்திய அழித்துள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், ஏற்கனவே பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக, உளவுத் துறை தகவலை சுட்டிக்காட்டி, ஜம்மு காஷ்மீர் மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக அம்மாநிலத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேலும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, இந்திய ராணுவத்தினர் அதிரடித் தாக்குதலை அடுத்து, எல்லைப் பகுதியில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்கள், எல்லைப் பகுதியில் இருந்து வெகுதூரத்துக்கு அப்பால், ஆக்ரமிப்பு பாகிஸ்தானின் உள்பகுதிக்கு மாற்றப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.