ஹரியானா மாநிலத்தில் காருடன், டிரக் மோதிய விபத்தில் ஒரு பெண் உட்பட 9 பேர் பலி
Sep 30 2016 3:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில், ராஜஸ்தானை நோக்கி சென்றுகொண்டிருந்த காரும், எதிரே வந்த டிரக்கும் மோதி விபத்துக்குள்ளாயின. இன்று அதிகாலை நிகழ்ந்த இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 12 பேர் காயமடைந்து, அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துகுறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று, மீட்பு பணியில் ஈடுபட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.