விசாகப்பட்டினத்தில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்டு சென்ற MV Harshvardhan என்ற கப்பல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது
Sep 29 2016 6:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து அந்தமான் புறப்பட்டுச் சென்ற MV Harshvardhan என்ற கப்பல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுக்கடலில் நகரமுடியாமல் நின்றது. இதன்காரணமாக 150 பெண்கள், 12 குழந்தைகள் உள்ளிட்ட 500 பயணிகளுடன் சென்ற இக்கப்பல் 6 மணி நேரத்திற்கும் மேலாக நடுக்கடலில் தத்தளித்தது. மோசமான வானிலை காரணமாக பயணிகள் அச்சமடைந்தனர். இந்நிலையில், கப்பல் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டு தற்காலிகமாக சரிசெய்யப்பட்டது. இதனையடுத்து, அந்தமான் செல்ல வேண்டிய அக்கப்பல், பயணிகளுடன் பத்திரமாக மீண்டும் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கே திரும்பியது.