உத்தரப்பிரதேசத்தில் மொராதாபாத் பகுதியில் காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திறந்தவெளியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது
Aug 27 2016 12:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மொராதாபாத் பகுதியைச் சேர்ந்த குந்தர்ஹி என்ற இடத்தில் வசிக்கும் மக்களில் 40 சதவீதம் பேருக்கு காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்பட்டுள்ளன. அண்மையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏராளமானோர் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க அப்பகுதியில் தரமான மருத்துவமனை ஏதும் இல்லை. இந்தநிலையில், அவர்கள் அனைவரும் அப்பகுதியைச் சேர்ந்த மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு செல்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு திறந்தவெளியில் சுகாதாரமற்ற சூழ்நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் சிகிச்சையின்போது, முறைப்படியான மருத்துவ வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்றும் புகார்கள் வெளியாகியுள்ளன.