காஷ்மீரில் அண்மையில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து சுற்றுலா துறை முழுவதும் முடங்கியது
Aug 27 2016 11:19AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஷ்மீரில், அண்மையில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் தெடர்ந்து ஊரடங்கு உத்தரவு நீடிப்பதால், சுற்றுலா துறை முழுவதும் முடங்கியுள்ளது. ஸ்ரீநகருக்கான விமான சேவை பாதிக்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில், ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத தளபதி Burhan Wani சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, அம்மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தொடர்ந்து 50-வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதைத்தொடர்ந்து, தீவிரவாதிகள் அவ்வப்போது, இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதலை அரங்கேற்றி வருகின்றனர். இதனால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதால், சுற்றுலாத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தொழிலை நம்பியுள்ளவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், பெரும்பான்மையான விமான நிறுவனங்கள், அம்மாநிலத்திற்கான தங்கள் விமான சேவையை பெருமளவில் குறைத்துள்ளன.