மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் புதிய விண்கலம் நாளை விண்ணில் ஏவப்படுகிறது - RLV-TD விண்கலத்தை பயன்படுத்த இஸ்ரோ திட்டம்
Aug 27 2016 7:25AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் புதிய விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 8.30 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. ராக்கெட்டுகளில் RLV-TD என்ற விண்கலத்தை பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள RLV-TD என்ற விண்கலத்தின் முதற்கட்ட சோதனை கடந்த மே மாதம் 23-ம் தேதி சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் நடந்தது. விண்ணை நோக்கி சீறிப் பாய்ந்த அந்த ராக்கெட், ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் சென்றது. அதன் பிறகு, திட்டமிட்டபடி விண்ணில் இருந்து பூமியை நோக்கி திரும்பி, வங்கக்கடலில் 500 கிலோ மீட்டர் தொலைவில் விழுந்தது. வெற்றிகரமாக இந்த சோதனை முடிந்ததால், விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து 2-ம் கட்ட சோதனைக்காக, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ஆராய்ச்சி மையத்தில் இருந்து நாளை காலை 8.30 மணிக்கு இந்த விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது. மொத்தம் 17 மீட்டர் நீளமும், 1.75 டன் எடையும் கொண்டது. மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய RLV-TD விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் 95 கோடி ரூபாய் செலவில் தயாரித்துள்ளனர். இந்த விண்கலம், பூமிக்கு திரும்பும்போது அதிக வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.