இமாச்சலபிரதேசத்தின் பல்வேறு இடங்களில் நிலஅதிர்வு - கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி
Aug 27 2016 7:17AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இமாச்சலபிரதேச மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலஅதிர்வு காரணமாக மக்கள் பீதி அடைந்தனர்.
இமாச்சலபிரதேச மாநிலம் சிம்லாவில் இன்று காலை சுமார் 6.45 மணி அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவான இந்த நில அதிர்வு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது. வீடுகள் குலுங்கியதால், அதிர்ச்சியடைந்த மக்கள் பீதியடைந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.