ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கைது - ஆயுதங்கள் பறிமுதல்

Aug 25 2016 12:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்திவரும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், அவ்வப்போது பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். மாவோயிஸ்ட்களை ஒடுக்க, தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த மேற்குவங்கம், ஒடிசா, ஆந்திரா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில், சிறப்புப்பிரிவு போலீசார் நியமிக்கப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 4 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த துப்பாக்கிகள், தோட்டாக்கள், கை பேசிகள் உள்ளிட்டவை கைப்பற்றபட்டன. கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை சதித்திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டத்தில் 2 பெண் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மற்றொரு பெண் தீவிரவாதி போலீசில் சரணடைந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00