பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி மரணமடைந்த நிர்பயா வழக்கில் தண்டனைப் பெற்ற வினய் ஷர்மா திகார் சிறையில் தற்கொலை முயற்சி - சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி
Aug 25 2016 7:17AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி வினய் ஷர்மா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு, தனது நண்பருடன் பேருந்தில் பயணம் செய்த மருத்துவ மாணவி நிர்பயா என்பவரை, பேருந்தின் ஓட்டுநர் உட்பட 6 பேர் கொண்ட கும்பல், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிர்பயா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட 6 பேரில், 5 பேருக்கு ஏற்கெனவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் ராம்சிங் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளம் குற்றவாளி கடந்த டிசம்பர் 2015ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டு, பாதுகாப்பு கருதி அரசுசாரா அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மற்றொரு குற்றவாளி வினய் ஷர்மா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிர்பயா கொலை வழக்கில் 2வது குற்றவாளியும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.