சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு நக்சல் தீவிரவாதிகளை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஏராளமான வெடி பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்
Jul 30 2016 2:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு நக்சல் தீவிரவாதிகளை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஏராளமான வெடி பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மேற்குவங்கம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணியில் மாநில போலீசாருடன், பாதுகாப்பு படையினரும் இணைந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பஸ்டர் என்னுமிடத்தில் இரண்டு நக்சல் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், தீவிரவாதிகள் இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் பதுக்கி வைத்திருந்த ஏராளமான டெட்டனேட்டர்கள் மற்றும் சக்திவாய்ந்த வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.